Thursday, September 19, 2024
Google search engine
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள் - செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 16 2024

இன்றைய ராசி பலன்கள் – செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 16 2024

https://www.sociihub.com/blog/rasiplan-today

இன்று மாலை 05.46 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று காலை 07.13 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி செய்வதால் சந்தோஷம் அடைவீர்கள். சக தொழிலாளர்களிடமும் நட்பை வளர்த்து சாதகம் பெறுவீர்கள்.வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். உங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.

ரிஷபம்

உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் போடும் திட்டத்தை முறியடிப்பீர்கள். அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள். மகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் நோய்தான் காரணமாக இருக்கும்.நெருங்கிய உறவினருக்கு பண உதவி செய்வீர்கள்.பேரக் குழந்தைகள் மிகுந்த ஆனந்தத்துக்கு காரணமாக இருப்பார்கள். உடன்பிறப்புகளால் தொல்லைகளை சந்திப்பீர்கள்.வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.

மிதுனம்

தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். கொடுத்த கடனை திருப்பி கேட்பதில் மனத்தாங்கல் அடைவீர்கள். மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேட்பீர்கள்.உங்கள் வேலையைப் பார்க்கும்போது, ​​உங்கள் முன்னேற்றமும் இன்றும் சாத்தியமாகும். வணிகர்கள் இன்று தொழில் தொடர அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம்.அரசாங்க பைல்களில் கையெழுத்திடும் போது அலட்சியம் காட்டாதீர்கள்.வேலை ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலில் இலக்கை அடைய சிரமப்படுவீர்கள்.பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது.

கடகம்

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள்.பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும்.

சிம்மம்

சிக்கலான வேலையை முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பெட்டிக்கடை வியாபாரிகள் முதலுக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள்.யாரிடமிருந்தும் கடன் வாங்கியவர்கள் எந்த சூழ்நிலையிலும் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும், இது பொருளாதார நிலைமையை கொஞ்சம் பலவீனப்படுத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். குடும்பத்தினர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். நண்பர்களோடு உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி

வியாபாரத்தில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். தொழிலுக்காக தேவைப்பட்ட பணம் கைக்கு வந்து சேர்ந்து உற்சாகமடைவீர்கள். கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பீர்கள். இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் புகழையும் அந்தஸ்தையும் உயர்த்துவீர்கள்.நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள். கேலியாக பேசி வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள்.இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள்.

துலாம்

அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவீர்கள். தந்தையார் மூலம் பணவரவு பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் எண்ணத்திற்கு விதை போடுவீர்கள். கடன் பிரச்சினைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்.உங்கள் வீட்டிற்கு நெருக்கமான ஒருவருடன் நீங்கள் வருத்தப்படக்கூடும், மேலும் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம்.வீட்டில் ஏதும் மாற்றங்கள் செய்வதற்கு முன் பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். இல்லாவிட்டால் அது கோபத்தை வரவழைத்து மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்திவிடும்.

விருச்சிகம்

வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை இன்று போடாதீர்கள். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி தாமதமாவதால் சங்கட்டப்படுவீர்கள்.நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். கடன் பிரச்சனையால் தலை குனிவு அடைவீர்கள்.உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும்.சகோதரியால் தொல்லை வந்து வேதனைப்படுவீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை.

தனுசு

துவண்டு கிடந்த தொழிலைத் தூக்கி நிறுத்துவீர்கள்.அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையின்றி உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் எந்த வேலையும் இன்று செய்ய வேண்டாம். வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலை செய்வீர்கள். சிறு வியாபாரிகள் சீரான லாபத்தைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனை கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள். இரும்புத் தொழில் செய்பவர்கள் எதிர்பாராத ஏற்றம் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.

மகரம்

மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ஆன்மிகம்தான் சிறந்தது என்பதால் ஆன்மிக உதவியை நாட வேண்டிய நேரம் இது. தியானமும் யோகாவும் உங்கள் மன உறுதியை மேம்படுத்தும். பணம் உங்களுக்கு முக்கியம், ஆனால் உங்கள் உறவுகளை கெடுக்கும் அளவிற்கு பணத்தைப் பற்றி அவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டாம்.வேலைப்பளு அதிகரிப்பதால் மூச்சு விட முடியாமல் திணறுவீர்கள். கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள். உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். சிறிய வியாபாரிகள் கடன் கொடுப்பதில் கண்டிப்புக் காட்டுவீர்கள். காய்கறி வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வெளியூரிலிருந்து வந்த நல்ல செய்தியால் குதூகலம் அடைவீர்கள்.இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை குலைக்கும்படி நடந்து கொள்வார்.

கும்பம்

வெளிநாட்டில் கிடக்கும் உங்கள் நிலத்தை இன்று நல்ல விலையில் விற்கலாம், இது உங்களுக்கு லாபம் தரும். உங்கள் கருணைக்கும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் வெகுமதி கிடைக்கும். ஆனால் அவசரமாக முடிவெடுப்பது உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் என்பதால் கவனமாக இருங்கள். குழந்தைப் பாக்கியம் இல்லை என்று தவிக்கும் குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்பட்டு மன நிம்மதி அடைவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்களுக்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை முனை மழுங்க செய்வீர்கள். வேலை இடத்தில் நல்ல பெயரைச் சம்பாதிப்பீர்கள்.

மீனம்

சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடி போவீர்கள். தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதால் கடன் வாங்குவீர்கள். தோப்பு குத்தகை மூலம் வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமாக நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் அமோகமான லாபம் அடைவீர்கள்.நீங்கள் திறந்த மனதுடன் இருந்தால் சில நல்ல வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது நீங்கள் ஓய்வு நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல பேர்களில் பின் தங்கி இருப்பீர்கள்.உங்களுக்கு உங்கள் துணைக்கும் இடையே அடுத்தவர் தலையிட்டால் அது உங்கள் துணையிடன் எதிர் விளைவையே ஏற்படுத்தும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments